NATIONAL

துன் மகாதீர்: பிஎன் மலேசிய மக்களின் ஒருமைப்பாட்டை வளர்க்கவில்லை?

ஷா ஆலம் , ஏப்ரல் 25:

அம்னோ தேசிய முன்னணி ஆளும் மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் மலேசிய மக்களின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் செயல்கள் தோல்வி அடைந்துள்ளது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இந்த நிலைமைக்கு காரணம் புத்ரா ஜெயா நிர்வாகம், மலேசிய மக்களின் வருமானத்தை பெருக்கும் நோக்கில் தோல்வி அடைந்தது ஆகும் என்று துன் மகாதீர் விவரித்தார்.

”  தேசிய ரீதியில் மலேசிய மக்களின் வருமானம் பூமிபுத்ரா மக்களின் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக இருப்பது ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது. பொருட்களை வாங்கும் சக்தி மிக முக்கியமானது. வருமானம் அதிகரித்தாலும் வாங்கும் சக்தி,  அந்நிய செலாவணி வீழ்ச்சியினால் மக்களின் வாழ்வாதாரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது,” என்று மகாதீர் கூறினார்.


Pengarang :