NATIONAL

மே 18 தொடங்கி, எஸ்பிஆர்எம்மின் தலைமை ஆணையராக முகமட் சுக்ரி நியமனம்!!!

புத்ரா ஜெயா, மே 21:

முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையர் (நடவடிக்கை) டத்தோ ஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் புதிய தலைமை ஆணையராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மே 18 தொடங்கி நடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹாம்ஸா கூறுகையில், மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மேன்மை தங்கிய மாமன்னரின் ஆணையின் படி டான்ஸ்ரீ ஸூல்கிப்லி அமாட், கடந்த மே 14-இல் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், இந்த நிலையில் 30 நாட்கள் நோட்டீஸ் வழங்க தேவையில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Pengarang :