SELANGOR

அஸ்மின் அலி, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியை ராஜினாமா செய்வதை உறுதிப்படுத்தினார்

ஷா ஆலம், மே 21:

சிலாங்கூர் மன்னர், சுல்தான் ஷாராஃபூடின் இட்ரிஸ் ஷா, மத்திய பொருளாதார நலன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு தனது ஆசியை வழங்கினார்.

 

 

 

 

 

சிலாங்கூர் சுல்தானின் அந்தரங்க செயலாளர் டத்தோ முகமட் மூனிர் பானி கூறுகையில், புதிய மந்திரி பெசார் பதவி ஏற்கும் வரையில் அஸ்மின் அலி தொடர்ந்து இந்த பதவியில் செயல்பட்டு வருவார் என்றார்.

”  அஸ்மின் அலி புதிய மந்திரி பெசார் பதவிக்கான பெயர் பட்டியலை சுல்தானிடம் வழங்க வேண்டும். சுல்தான் அந்த பட்டியலை பரிசீலனை செய்து புதிய மந்திரி பெசாரை தேர்ந்தெடுப்பார்,” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அஸ்மின் அலி சுல்தானிடம் தமது புதிய மத்திய பொருளாதார நலன் அமைச்சு பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது தொடர்பில் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :