NATIONAL

ஒவ்வொரு வாரமும் துன் மகாதீர் செய்தியாளர்களை சந்திப்பார்?

ஷா ஆலம் , மே 24:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒவ்வொரு வாரமும் ஊடகங்களுடன் சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து செய்தியாளர்களிடம் கலந்துரையாடல் நடத்துவார். ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசப்படும் விவரங்களை வெளியிடுவார் என்று துன் மகாதீர் உறுதி அளித்தார்.

”  ஊடகங்கள் சந்திப்பு இல்லை என்றால் செய்தியாளர்கள் தவறான தகவல்களை பரப்ப நேரிடும். மேலும், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி பொய் செய்தி சட்டத்தை அகற்றி விடும். ஆகவே , பொய் செய்தி வெளியிடுபவர்களை தடுக்க முடியாது. இதற்காக, ஒவ்வொரு வாரமும் ஊடகங்கள் சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்வோம்,” என்று துன் மகாதீர் உறுதி அளித்தார்.

 

 

 

 

 

 


Pengarang :