NATIONAL

திடல் தட விளையாட்டாளர்கள் நலம் : அமைச்சுடன் மாநில அரசு ஒத்துழைக்கும்

ஷா ஆலம், ஜன.24:

திடல் தட விளையாட்டாளர்களின் நலனைப் பேணுவதில் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சுடன் மாநில அரசாங்கம் ஒத்துழைக்கும்.

இந்த விளையாட்டாளர்களின் நலனுக்கு சிலாங்கூர் என்றுமே முன்னுரிமை தந்து வந்துள்ளது என்று இளைய தலைமுறை மற்றும் விளையாட்டு மற்றும் மனித மூல தன மேம்பாட்டு துறைக்கான ஆட்சி குழு உறுப்பினர் முகமட் கைருடின் ஓஸ்மான் கூறினார்.

எனவே, இந்த விளையாட்டாளர்கள் நலன் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க தாம் இளைஞர் விளையாட்டு அமைச்சின் அலுவலகத்திற்கு செல்லவிருப்பதாக அவர் சொன்னார்.

மாநில நிலையில் இவ்விளையாட்டாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே சுமூகமான உறவு நிலவுவதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :