ஷா ஆலம், பிப்.5:
தெ ரெட் ஜயண்ட்ஸ் குழுவிற்கு பக்க பலமாக இருக்கும் ஆதரவாளர்களுக்கு சிலாங்கூர் காற்பந்து சங்கம் (எஃப்ஏஎஸ்) பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டது.
சூப்பர் லீக் ஆட்டத்தில் சிலாங்கூர் அதன் சொந்த இடத்தில் பெல்டா யுனைடட் அணிக்கு எதிராக ஷா ஆலம் அரங்கத்தில் நிரம்பிருந்த 13 ஆயிரம் ரசிகர்களையும் சங்கம் பாராட்டியது.
சிலாங்கூர் அணிக்கு பக்கபலமாக அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக தனது முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியது.
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பெல்டா யுனைடட் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் சிலாங்கூரின் ரெட் ஜயண்ட் அணி 3 -1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.