Dato’ Menteri Besar Amirudin Shari (tengah) bercakap kepada media ketika Majlis Rumah Terbuka Hari Raya Aidiladha di Kediaman Rasmi Menteri Besar pada 12 Ogos 2019. – Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALSELANGOR

விபத்தில் ஆடவர் மரணம் : விரிவான விசாரணை நடத்த காவல் துறைக்கு வழி விடுவோம்! – அமிருடின் ஷாரி

ஷா ஆலம், ஆக.12-

கோலாலம்பூர், சிரம்பான் நெடுஞ்சாலையில் ஓர் ஆடவர் மரணமடைந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப் படுவதற்காக இவ்விவகாரம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் இனவிவகாரம் ஏதும் இல்லை என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார். “எந்தவோர் இனத்தைச் சேர்ந்தவர் புரிந்திருந்தாலும், இது போன்ற ஒரு கொடூரமான செயலை ஏற்றுக் கொள்ள முடியாது.” என்றார் அவர்.

“இந்தச் சம்பவத்தில் இன விவகாரம் இருக்க சாத்தியம் இல்லை என்று நான் நம்புகிறேன். இந்தச் செயலை அனைத்து தரப்பினரும் கடுமையாக கண்டிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :