KUALA LUMPUR, 15 Mei — Timbalan Ketua Polis Negara Datuk Mazlan Mansor pada majlis serah terima tugas jawatan dan Naib Pengerusi Persatuan Keluarga Polis (PERKEP) Malaysia hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
Uncategorized @ta

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை விபத்து: இனவாதப் பிரச்னையாகத் திசை திருப்பப்படுகிறது

கோலாலம்பூர், ஆக.12-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் காஜாங் அருகே கடந்த சனிக்கிழமை நடந்த விபத்தை இனவிவகாரமாக்க மாற்ற குறிப்பிட்ட சில தரப்பினர் முயன்று வருகின்றனர் தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் கூறினார்.

இது போன்ற நடவடிக்கைகள் நாட்டின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் என்று அவர் சொன்னார்.
“சமூக வலைத் தளங்களில் பல்வேறு ஊக அடிப்படையிலான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன” என்றார்.

“இச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்கும் சில அறிக்கைகளை காவல் துறை வெளியிட்டுள்ளதோடு விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்” என்றார் அவர்.


Pengarang :