சுபாங் ,ஆக,22-
கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்துள்ள சிலாங்கூர் இன்வெஸ்ட் எனும் சிலாங்கூர் முதலீட்டு நிறுவனத்திற்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த ஆண்டில் மிகச் சிறந்த முதலீட்டை மாநிலத்திற்குப் பெற்றுத் தந்ததன் வழி இந்நிறுவனம் வரலாற்றுப்பூர்வ சாதனையைப் புரிந்துள்ளது என்று இந்நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிட்ட அறிக்கையில் அமிருடின் கூறினார்.
“20ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிலாங்கூர் இன்வெஸ்ட் நிறுவனத்தின் கடந்தாண்டு அடைவு நிலையானது மாநில வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும்” என்று அவர் வர்ணித்தார்.
“மாநிலத்திற்கு அதிக முதலீடுகளைக் கவரும் நடவடிக்கையை சிலாங்கூர் இன்வெஸ்ட் நிறுவனம் தொடரும் என்று நான் நம்புகிறேன். அதே வேளையில், தனது முதலீட்டு நடவடிக்கைகளைப் பிரபலப்படுத்த ஊடகங்களுடன் இந்நிறுவனம் மேலும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கும் என நான் எதிர்ப்பார்க்கிறேன்” என்றார் அவர்.