NATIONALSELANGOR

மெர்டேக்கா முகிபா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வீர்!

ஷா ஆலம், ஆக.29-

இங்குள்ள எஸ்ஏசிசி பேரங்காடி மற்றும் எஸ்ஏசிசி நடைபாதையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் மெர்டேக்கா முகிபா நிகழ்ச்சியில் மக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று பிகேஎன்எஸ் சொத்துடைமை நிறுவனம் (பிஆர்இசி) கேட்டுக் கொண்டது.

வருகையாளர்களை உற்சாகமூட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக அதிகாரி ஃபக்ரு அப்துல் கனி கூறினார்.
“சிறார்களுக்காக ‘பேய்பிளேட் மெர்டேக்கா பெட்டல்’ எனும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அதற்கு 1,300 வெள்ளி மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் போட்டியின் பதிவு கட்டணம் வெள்ளி 10 மட்டுமே” என்றார் அவர்.

“ஆகஸ்ட் 31 தொடங்கி செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் பிகேஎன்எஸ் கொம்பிளக்ஸ் கெடுங் ஹாரியானில் நடைபெறும் இந்தப் போட்டியில் 14வயதுக்கும் குறைவான சிறார்கள் பங்கு பெறலாம் “என்றும் அவர் சொன்னார்.


Pengarang :