SELANGOR

சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) திட்டம்

ஷா ஆலம், செப்டம்பர் 11:

தொழில் முனைவோர் மேம்பாடு, புறநகர்  வளர்ச்சி, கிராம மற்றும் கிராம மரபுகள் நிரந்தரகுழுக்களின்   ஆட்சி மன்ற  உறுப்பினர் மாண்புமிகு ரோட்சியா இஸ்மாயில் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட நகராண்மை கழகத்தின் ஒத்துழைப்புடன் சித்தம் திட்டத்தின் அறிமுகம் விழா மற்றும் விளக்க கூட்டம் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் விவரங்கள் பின்வருமாறு:

தேதி: 14 /09/2019 (சனிக்கிழமை)
நேரம்: காலை 8.00 – மதியம் 1.00 மணி.
இடம்: ஸ்ரீ சியந்தான் ஹால், எம்.டி.கே.எஸ் அலுவலகம்.

இது சம்பந்தமாக, அனைத்து சிறு தொழில்முனைவோர், வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் புதிதாக தொழிலைத் தொடங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். பதிவு செய்ய வரும் போது, சம்பந்தப்பட்டவர்கள்  அடையாள அட்டையை உடன் கொண்டுவரவும்

இந்நிகழ்வில் தங்கள் வியாபாரத்தை இலவசமாக விளம்பரம் செய்ய விரும்புவோர் 03-55447104 க்கு தொடர்பு கொள்ளவும்.

மிக்க நன்றி,

செயலகம்,
தொழில் முனைவோர் மேம்பாடு, ஊரக வளர்ச்சி, கிராமம் மற்றும் பாரம்பரிய கிராமம் தொடர்பான நிலைக்குழு


Pengarang :