PBTSELANGOR

எஸ்எஸ்15 பகுதி மேம்பாடு காண்கிறது

சுபாங் ஜெயா, செப்.30:

இங்குள்ள எஸ்எஸ்15 பகுதியுள்ள எஸ்எஸ்15/4 நவீன சந்தை மற்றும் எஸ்எஸ் 15/4 ஜி ரோஜாக் மாமாக் வட்டாரங்களின் தரம் உயர்த்தப்படும் என்று சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்ஜே) அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதிகள் அழகு படுத்தப்படுவதோடு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அவற்றின் பாதுகாப்பு அம்சங்களின் தரமும் உயர்த்தப்படும் என்று மன்றத்தின் தலைவர் நோராய்னி ரோஸ்லான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் 100க்கும் அதிகமான ரகசிய ஒளிப்பதிவு காமிராக்கள் பொருத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

இவ்வாண்டு இறுதிக்குள் இவ்வட்டாரம் நெடுகிலும் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக அதிநவீன சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :