கோலாலம்பூர், அக்.1-
2020 வரவு செலவுத் திட்ட அறிக்கை அக்டோபர் 11ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தேசிய தற்காப்பு துறை வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புருணை, ஆஸ்திரேலியா, ஜெர்மன் மற்றும் நியு சிலாந்து ஆகிய நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு நாட்டில் முதல் முறையாக இந்த வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தற்காப்பு அமைச்சர் முகமது சாபு கூறினார்.
நாடாளுமன்றத்தில் இவ்வறிக்கை விவாதிக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்றார் அவர். இவ்வறிக்கை கல்வியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் அபிப்பராயங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.