பெட்டாலிங் ஜெயா, அக்.4-
கட்சி தாவுதல் என்பது நாடாளுமன்ற உறுப்பினரைச் சார்ந்தது ஆனால் வலுவான காரணத்தின் அடிப்படையில் அது அமைந்திருக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நினைவுறுத்தினார்.
அரசாங்கத்திற்கு அல்லது தங்களின் கட்சிக்கு தங்களால் பங்களிக்க முடியாது என்று நினைப்பவர்களின் கட்சி தாவல் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.
“ஒரு கட்சியின் வேட்பாளராக நின்று அதன் காரணமாக வெற்றி அடைந்த பின்னர் வேறொரு கட்சிக்கு தாவுவது என்பது உங்களின் வாக்குறுதியை நீங்களே மீறும் செயலாகும்” என்று அவர் சொன்னார்.
“அதேவேளையில், ஒரு பலவீனமான அரசாங்கத்தில் இருந்து கட்சி மாற முடியாத சூழலில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், ஒரு நிர்வாக சிறப்பாக செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட நபரால் பங்களிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்” என்று மகாதீர் தெரிவித்தார்.