NATIONAL

சட்டவிதியைப் பின்பற்றும் ரப்பர் கையுறை நிறுவனங்களுக்கு அமைச்சு உதவும்

புத்ராஜெயா, அக்.4-

அனைத்துலக தரத்திலான சமுக கடப்பாடு நடைமுறை 2021ஆம் ஆண்டு அமலுக்கு வருவதற்கு முன்னர் அந்நடைமுறைகளை கடைபிடிக்கத் தொடங்கும் ரப்பர் கையுறை தொழிற்சாலை நிறுவனங்களுக்கு அமைச்சு உதவும் என்று மனித வள அமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.

டபள்யூஆர்பி ஆசிய பசிபிக் எனும் ரப்பர் கையுறை தொழிற்சாலை நிறுவனம் கட்டாயத் தொழிலாளர்களைப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் அதன் ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்கா தடைவிதித்து. எனவே அனைத்துலக சட்டவிதிகள் உடனடியாக பின்பற்ற்ப்படுவதை ஊக்குவிப்பது அவசியம் என்றார் அவர்.

“சம்பந்தப்பட்ட தொழிற்சாலையுடன் கடந்த ஆண்டு பேச்சு நடத்தியதோடு கட்டாய தொழிலாளர்களினால் ஏற்பட்ட பாதுகாப்பு குறித்தும் எச்சரித்தேன்” என்று ரப்பர் கையுறை தொழிற்சாலை நடத்துநர்களுடனான பொது சந்திப்பு கூட்டத்தில் குலசேகரன் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி கட்டாய தொழிலாளர்களைப் பயன்படுத்திய ஐந்து நாடுகளின் ஏற்றுமதிக்கு அமெரிக்க எல்லை பாதுகாப்பு மற்றும் சுங்க வரி நிறுவனம் தடைவிதித்தது.


Pengarang :