ஷா ஆலம், நவம்பர் 22:
பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ள சிலாங்கூர் பல்கலைக் கழகத்தில் (யுனிசெல்) ‘360 விவேக சிலாங்கூர்’ சூறாவளி பயணம் என்ற நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என யுனிசெல்லின் தொழில்முறை தொடர்பு இயக்குனர் ஹாஸ்ரில் அபு ஹாசான் கூறினார்.
இந்த ஆண்டின் கடைசி சூறாவளி பயணமாக இது அமையும் என்றும் யுனிசெல்லின் 19-ஆம் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு நவம்பர் 28 தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என அவர் தெரிவித்தார். மந்திரி பெசார் பெறுநிறுவனமும் (எம்பிஐ) சிலாங்கூர் பல்கலைக் கழகமும் மற்றும் சிலாங்கூர் பொது நூலக கழகம் ஆகியவை இணைந்து இந்த சூறாவளி பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது என்று மேலும் அவர் விவரித்தார்.