பெட்டாலிங் ஜெயா, நவ.22-
சிங்கப்பூர் சுற்றுப் பயணிகளை அதிகம் கவரும் அந்நிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிலாங்கூர் மாநிலம் அதிக எண்ணிக்கையிலானோரைக் கவர்ந்துள்ளது. இம்மாநிலத்திற்கு வருகை புரிந்து 7.23 மில்லியன் சுற்றுப்பயணிகளில் 316.230 அண்டை நாடான சிங்கப்பூர் சுற்றுப் பயணிகள் என்று கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, மலாய் பாரம்பரிய துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அசாரி தெரிவித்தார்.
இது ஒரு சிறந்த அடைவு நிலை என்றும் இச்சுற்றுலா துறையின் வழி மாநில மற்றும் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என்றும் அவர் சொன்னார். மேலும், சுற்றுலா வரியாக 10.3 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டிருப்பது மாநில அரசாங்கத்தின் முக்கிய வருவாய் துறையாகவும் இது திகழ்கிறது என்று 2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டின் மாநில அளவிலான தொடக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் அப்துல் ரஷிட் குறிப்பிட்டார்.