Lim Guan Eng pada sidang media selepas pembentangan Belanjawan 2020 di Bangunan Parlimen hari ini. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONAL

பொதுச் சேவை ஊழியர்களுக்கு ஊதியம்: போதுமான நிதிவளத்தை அரசு கொண்டுள்ளது!

புத்ராஜெயா, நவ.28-

பொதுச் சேவை ஊழியர்கள் அனைவரும் ஊதியம் வழங்குவதற்குத் தேவையான நிதி வளத்தை அரசாங்கம் கொண்டிருப்பதால் இதற்காக கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்ரு நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

நாட்டின் நிதி அளவு தொடர்ந்து ஆ3 அல்லது ஆ- என்ற நிலையில் இருப்பதை இது உறுதி செய்வதாகவும் பொதுச் சேவை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட்டரசு அரசாங்கம் கடன் வாங்கினால் இந்நிலை சரியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

அரசாங்கப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு இதர நிதி கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் போதுமான நிதிவளத்தை மத்திய அரசாங்கம் எப்போதும் கொண்டுள்ளது என்று கடந்த திங்கள் கிழமை நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் அம்னோ துணைத் தலைவர் டத்தோ முகமது ஹாசான் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் விடுத்த அறிக்கையில் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.

அரசு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மத்திய அரசு கடன் வாங்குவதாக முகமது ஹாசான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டின் மூன்றாம காலாண்டு ஊதியம் வழங்குவதற்கு தேவை 19.9 பில்லியன் ரிங்கிட் ஆகும். ஆனால் அக்காலக் கட்டத்தில் ஆரசு வருவாய் 68.8 பில்லியன் ரிங்கிட் என்றிருக்கும் நிலையில் அவருடைய கூற்று அபத்தமானது என்று குவான் எங் தெரிவித்தார்.


Pengarang :