ஷா ஆலம், நவ.29-
ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் ஏற்பாடு செய்த தூய்மையான கழிவறை இயக்கத்தில் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகள் மற்றும் பொது கழிவறை உரிமையாளர்கள் உட்பட 200 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி கடந்த நவம்பர் 26ஆம் தேதி இங்குள்ள ஹோட்டல் கிராண்ட் புளுவேவ் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஹாரிஸ் காசிம் தொடக்கி வைத்த “வாருங்கள், நமது கழிவறையை மாற்றுவோம்’ எனும் கருப் பொருளுடனான 2019 ஷா ஆலம் மாநகராட்சி மன்ற கழிவறை தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக எம்பிஎஸ்ஏ பொது தொடர்பு பிரிவு தலைவர் ஷாஹ்ரின் அகமது கூறினார்.
அனைத்து கட்டடங்கள் மற்றும் கடைகளிலும் கழிவறையின் தூய்மையைப் பேணுவது மக்களுக்கு அறிவிப்பதோடு விழுப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்வியக்கம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
அதேவேளையில், ஷா ஆலமிற்கு வருகைப் புரியும் சுற்றுப் பயணிகள் பயன்படுத்தவிருக்கும் பொது கழிவறைகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யும் மாநகராட்சி மன்றத்தின் நடவடிக்கைகளில் இதுவும் அடங்கும் என்றார் அவர்.