ஷா ஆலம், டிசம்பர் 6:
மலாக்கா அனைத்துலக வாணிப மையத்தில் (எம்ஐடிசி) நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டிற்கு வெளியே ஏற்பட்ட சம்பவத்தை காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை சரியான முறையில் தண்டிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” இளைஞர் மாநாட்டில் நடைபெற்ற சம்பவத்தை ஒட்டி அறிக்கையை எனக்கு அனுப்பி உள்ளனர். ஆகவே, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தவறு புரிந்தவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் பரிந்துரை செய்கிறேன்,” என்று தமது அறிக்கையில் அன்வார் கூறினார்.