雪州行政议员黄思汉。
SELANGOR

திடக் கழிவு அழிப்பு, நிர்வாகத்தில் புதிய முறைகள் அறிமுகம்!

ஷா ஆலம், டிச.26-

நிர்வாகத் தரம், தரவு முறை, நடவடிக்கை கண்காணிப்பு, தொழில்நுட்பம் போன்றவை திடக் கழிவுப் பொருள் அகற்றும் மற்றும் அழிக்கும் நடவடிக்கைகளையும் தரம் உயர்த்துவதோடு முழுமைப்படுத்தும்.
இவ்விரண்டு துறைகளின் அமலாக்க நடவடிக்கைகள் 2025ஆம் ஆண்டு வாக்கில் முதல் விவேக மாநிலமாக உருவெடுக்கும் சிலாங்கூர் அரசாங்கத்தின் மேம்பாட்டிற்கு இணையாக இருப்பது அவசியமாகும் என்று ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

திடக் கழிவு அகற்றல் மற்றும் அழிப்பு சம்பந்தப்பட்ட துணை நிறுவனங்களின் புதிய முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை மாநில அரசு எப்போதும் வரவேற்கும் என்றார் அவர். எனவே, விவேக மாநிலமாக உருவெடுக்கும் நமது இலக்கிற்கு ஏற்ப இத்துறைகளிலும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தரவு முறை, கண்காணிப்பு நடவடிக்கைகள் புகுத்தப்படுவதை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :