கோலாலம்பூர், டிச.27-
மார்ச் 2020க்குள் சுமார் 600.000 பயனீட்டாளர்கள் மின் கட்டண முறைக்கு மாறுவர் என்று ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் இலக்கு கொண்டுள்ளது.
இவ்வாண்டு டிசம்பர் 16ஆம் தேதி வரையில் மொத்தம் 452,600 பயனீட்டாளர்கள் மின் கட்டண முறைக்கு மாறிவிட்டனர் என்று அந்நிறுவனத்தின் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலிம் மாட் சோம் கூறினார்.
“2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி மின் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், இதுவரை 452,600 பயனீட்டாளர்கள் பதிந்து கொண்டுள்ளனர்” என்றார் அவர்.
“எனவே, அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் மின் கட்டண முறையைப் பயன்படுத்தும் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 600,000 எட்டும் நாங்கள் கணித்துள்ளோம்” என்று சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.
இந்த மின் கட்டண முறை மூலம் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் என்ற ரீதியில் இவ்வியக்கம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.