ஷா ஆலாம், ஜன.8-
சிலாங்கூர் மாநிலத்தில் கடந்தாண்டு நிகழ்ந்த 19,810 குற்றச் செயல்களில் இவ்வாண்டு 1,528 சம்பவங்கள் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
குறைந்துள்ள 7.16 விழுக்காடு குற்றச் செயல்கள் தொடர்பில் 33,977 புலன் விசாரணை அறிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் அஸாம் ஜமாலுடின் தெரிவித்தார்.
45 விழுக்காட்டு சம்பவங்களுக்குத் தீர்வு காண முடியும் என்று இலக்கு வகுக்கப்பட்டபோதிலும் 12,232 சம்பவங்களை உட்படுத்திய 61.75 விழுக்காட்டு சம்பவங்களுக்குத் தீர்வு காண முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“குற்றப்புலனாய்வு துறை சூதாட்டம், ஒழுங்கீனம் மற்றும் குண்டர் கும்பல் போன்ற நடவடிக்கைகளை முறியடிக்கத் திட்டமிட்டுள்ளது. 4,650 ஒப்ஸ் டாடு, 1,434 ஒப்ஸ் நோடா மற்றும் 417 ஒப்ஸ் சந்தாஸ் நடவடிக்கைகள் வாயிலாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றார் அவர்.