NATIONALRENCANA PILIHAN

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மே 18ஆம் தேதி தொடங்கும்

ஷா ஆலாம், மார்ச் 4-

வரும் மார்ச் 9ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மே 18ஆம் தேதி தொடங்கும் என்று மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது அரிப் முகது யூசோப் தெரிவித்தார்.
இந்தப் புதிய தேதி குறித்த அறிக்கை நேற்றிரவு கிடைத்ததாக பெரித்தா ஹாரியான் நாளேடு கூறியது.

“மார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் இல்லை. இக்கூட்டம் மே 18ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்” என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.
இக்கூட்டத் தொடர் ஜூன் 23ஆம் தேதி மொத்தம் 15 நாட்களுக்கு நடைபெறும் என்றார் அவர். முன்னதாக, இக்கூட்டத் தொடர் மார்ச் 9 தொடங்கி ஏப்ரல் 16 வரை நடைபெறும் என்று அட்டவணையிடப்பட்டிருந்தது.


Pengarang :