ஷா ஆலம், மார்ச் 5-
தாய்லாந்துக்கான கொசோவா தூதர் முகமது பிராஜ்ஷோரியை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மரியாதை நிமித்தம் சந்தித்தார். புத்தாக்கம், தொழில்நுட்பம். பருவ நிலை மாற்றம், பொருளாதார மேம்பாடு போன்ற துறைகள் தாங்கள் இருவரும் கருத்து பரிமாறிக் கொண்டோம் என்று தனது முகநூலில் அமிருடின் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பாக்கான் மற்றும் ஐரோப்பா வட்டாரத்தில் காணப்படும் கொசோவா ஹலால் உணவுக்கான சந்தை வாய்ப்புகள் மற்றும் அத்தொழில்துறை மேம்பாடுகள் குறித்தும் தம்மிடம் விளக்கம் அளிக்கப்பட்டது என்றார் அவர். 2008ஆம் ஆண்டு தொடங்கி கொசோவாவுடன் சிலாங்கூர் நல்ல நட்புறவு கொண்டுள்ளதால், பல்வேறு ஒத்துழைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் சொன்னார்.