ஷா ஆலம், மார்ச் 10-
2015ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 5 ஆண்டுகளில் வடிகால் சந்தவாக மொத்தம் 124.2 மில்லியன் ரிங்கிட்டை சிலாங்கூர் வடிகால் மற்றும் நீர் பாசன துறை (ஜேபிஎஸ்) வசூலித்தது. ஏக்கர் ஒன்று 10,000 ரிங்கிட் சந்தா தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் வசூலித்ததன் வழி மாநில அரசாங்கத்தின் வருவாய் அதிகரித்துள்ளது என்று அதன் இயக்குநர் டத்தோ பாப்பார் அஸான் தெரிவித்தார்.
“இந்த தொகை இங்கு அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ள பிரச்னைகளைக் குறைப்பதற்கான வடிகால் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது” என்றார் அவர்.
இந்த நடவடிக்கைகள் தவிர்த்து, புத்தாக்க வடிவமைப்புத் திட்டங்களிலும் ஜேபிஎஸ் திவீரமாகப் பங்கெடுத்ததோடு ஜேபிஎஸ் மலேசியா ஏற்பாட்டிலான புத்தாக்க வடிவமைப்பு போட்டியில் சிறப்பு பரிசைத் தட்டிச் சென்றது என்று தகவலையும் காப்பார் வெளியிட்டார்.