PUTRAJAYA, 6 April — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah bercakap pada sidang media harian berkaitan jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini.?Kementerian Kesihatan mengesahkan satu lagi kematian akibat COVID-19 yang menjadikan jumlah keseluruhan sehingga kini ialah 62 orang dan 3,793 kes positif COVID-19.–fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: திருமண விருந்து, தேவாலய கூட்டுத் தொழுகை ஆகியவை சம்பந்தப்பட்ட சம்பவங்கள் அதிகரிப்பு!

ஷா ஆலம், ஏப்.9-

பண்டார் பாரு பாங்கி திருமண விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் மேலும் 2 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 பேர் குணமடைந்துள்ள வேளையில், 5 நோயாளிகள் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

74 பேர் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று முகநூல் வாயிலாக தெரிவித்த நோர் ஹிஷாம், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குழுவின் ஐந்தாம் தலைமுறைக்கு இத்தொற்று பரவியுள்ளது என்ற தகவலையும் வெளியிட்டார்.

இதனிடையே, சரவாக் கூச்சிங்கில் தேவாலயம் ஒன்றில் கலந்து கொண்டவர்களில் மேலும் 24 பேருக்கு இத்தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 112ஆக உயர்ந்தது என்றார் அவர். அவர்களில் 11 பேர் வீடு திரும்ப அனுமதி அளிகப்பட்டுள்ள வேளையில் 4 பேர் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் 48 பேர் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருவதாக எஞ்சிய 47 தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 2 மரணமடைந்துள்ளனர்.


Pengarang :