ஷா ஆலம், ஏப்ரல் 10:
சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) இன்று மிகப் பெரிய அளவில் மிகவும் ஆபத்தான பகுதிகள் அல்லது சிவப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட ஆறு மாவட்டங்களில் கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளும் என அதன் தலைவர் முனைவர் ஸூல்கிப்லி அமாட் தெரிவித்தார். ஆனாலும், மக்கள் பீதியடைந்து விடுவார்கள் என்ற காரணத்தினால் சம்பந்தப்பட்ட பகுதிகளின் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
” சிவப்பு பகுதிகளில் நாம் பரிசோதனைகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு மட்டும் போதும். சம்பந்தப்பட்ட நபர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு பரிசோதனையை பற்றி நாங்கள் எடுத்துச் சொல்வோம்,” என்று நேற்று தொடர்பு கொண்ட போது இவ்வாறு ஸூல்கிப்லி தெரிவித்தார்.