ஷா ஆலம், ஏப்ரல் 11:
“சிலாங்கூர் டியூடர்’ எனப்படும் இணையத்தில் கல்வி கற்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டத்தில் பதியவிருக்கும் மாணவர்கள் தொடர்ந்து பதிந்துக் கொள்ளலாம் என மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார். சிலாங்கூர் மாநில பரிவு மிக்க ஊக்குவிப்பு அறிவிப்பின் இரண்டாம் கட்ட சிறப்பு திட்டமான இதில் இன்னும் காலியான இடங்கள் உள்ளது என்று அவர் டிவிட்டரில் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கான இலவச இணையக் கல்வி திட்டத்தில் இது வரையில் (நேற்று மாலை 3 மணி) 38,372 பேர்கள் பதிந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 5-இல் இந்த எண்ணிக்கை 21,000 மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.