ஷா ஆலம், ஏப்ரல் 22:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்த கோவிட்-19 தொற்று நோய் சமூக பரிசோதனையை மேற்கொண்ட உணவு மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யும் பணியாளர்களின் செயல்பாட்டை கண்டு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மகிழ்ச்சி அடைந்தார். இந்த பிரிவினரே கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் மிக சுலபமாக பரவக் கூடியவர்கள் என மந்திரி பெசார் விவரித்தார்.
” மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்த காரில் இருந்த படி பரிசோதனை நடவடிக்கையில் இன்று பல உணவு விநியோகம் செய்யும் பணியாளர்கள் அதிகமாக பங்கேற்றனர். தினந்தோறும் பணியாற்றி வரும் இவர்கள் மிக சுலபமாக தொற்று நோய் பரவக்கூடிய ஆபத்தில் இருக்கின்றவர்கள். இன்று மாநில அரசாங்கம் வழங்கிய சமூக பரிசோதனையை மேற்கொண்டனர்,” என்று அமிருடின் ஷாரி கூறினார்.