புத்ராஜெயா, ஏப்ரல் 28:
பல்கலைக்கழகங்களில் தங்கியுள்ள மாணவர்கள் சமூக நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அகமாட் உறுதியளித்துள்ளார். மாணவர்களில் பகுதியினர் சொந்த ஊர்களுக்குக் சென்றுள்ள வேளையில் சுமார் 15% உயர்கல்வி நிலையங்களில் தங்கியிருக்க முடிவெடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் பாதுகாப்பையும் சுகாதார விவகாரங்களையும் கருத்தில் கொண்டு செயல்படும் என அவர் கூறினார்.
உயர்கல்வி மாணவர்களின் ஒரு பகுதியினர் நேற்று முதல் கட்டம் கட்டமாக தங்களின் தொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.