ஷா ஆலம், மே 4:
புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற உறுப்பினர் ஜூவாரியா ஸூல்கிப்லி தமது சட்ட மன்றத்தில் பொது மக்களுக்கு 4,725 கிலோ மீன்களை இலவசமாக வழங்கினார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவைகளை பகிர்ந்து அளித்ததாக அவர் தமது முகநூலில் பதிவு செய்தார். முதலில் தாம் எதிர்பார்த்த அளவான 3,800 கிலோவை இது மிஞ்சியது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” இந்த ரமலான் மாதத்தில், ஆண்டவன் புண்ணியத்தில் கோலா சிலாங்கூர் மற்றும் புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற பொது மக்களுக்கு கம்போங் மற்றும் உரிப்பாறை மீன்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் எங்களது இலக்கு வெறும் 3,800 கிலோ மீன்கள் மட்டுமே. ஆனால், மக்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை கண்டு மேலும் அதிகரிக்கப்பட்டது. இறுதியாக, மீன்களின் அளவு 4,725 கிலோ பொது மக்களுக்கு வழங்கப் பட்டது,” என்று ஜூவாரியா ஸூல்கிப்லி தமது முகநூலில் பதிவு செய்தார்.