SHAH ALAM, 10 Mei — Keadaan aliran trafik menuju ke Plaza Tol Rawang Selatan kelihatan terkawal ketika tinjauan hari keempat Pergerakan Rentas Negeri yang memohon melalui aplikasi Gerak Malaysia hari ini. Berdasarkan jadual yang ditetapkan, perjalanan hari ini merupakan hari terakhir Pergerakan Rentas Negeri yang merangkumi pergerakan pulang dari Negeri Selangor, Negeri Sembilan dan Terengganu. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

பிகேபிபி ஜூன் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது- பிரதமர்

புத்ராஜெயா, மே 10:

நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) ஜூன் 9 வரை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ  முஹீடின  யாசின் அறிவித்துள்ளார். சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கெஎன்) ஆகியவற்றுடன் கலந்தாலோசனை செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் கோவிட்-19 நோய் பரவலை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இந்த முடிிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“ சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆலோசனையின் பேரில், பிகேபிபி மே 12 முதல் ஜூன் 9 வரை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்க விரும்புகிறேன், இது 4 வாரங்கள் தொடர உள்ளது. பொது மக்கள் அனைவரும் பிகேபிபி நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். தொடர்ந்து காவல்துறை மற்றும் முன் வரிசைப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, கோவிட்-19 நோய் தொடர் சங்கிலியை முற்றாக அறுக்க நாட்டு மக்கள் அரசாங்கம் நிர்ணயம் செய்த வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும்,   ” என்று அவர் இன்று ஆர்டிஎம் நேரடி ஒளிபரப்பு வழியாக ஒரு சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.


Pengarang :