கோலாலம்பூர் மே 18-
பிரதமர் தான் ஸ்ரீ முஹீடின் யாசினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். இதனிடையே எதிர்க்கட்சியின் வரிசையில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். சரவாக்கை சேர்ந்த பாரு பியான் சுயேட்சையாக உட்கார்ந்து இருந்தார். இதனால் நாடாளுமன்றத்தில் பிரதமர் பெரும்பான்மையை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் 114 என்பது எந்நேரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் உட்பட அவர் சார்ந்த கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமர்ந்திருந்தார்.