ஷா ஆலம், ஜூன் 11:
மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விண்வெளியில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் சிலாங்கூருக்கு உள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறினார். இத்துறையில் தொடர்புடைய நிறுவனங்களில் 62 சதவீதம் சிலாங்கூரில் இயங்கி வருவதால், தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பை அதிகமான ஏற்படுத்தி உள்ளதாக டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நம்புகிறார்.
” மாநிலத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட உயர் கல்வி மற்றும் கல்லூரிகளும் விண்வெளி தொடர்பான கற்றலை வழங்குகின்றன, (இதனால்) சிலாங்கூர் இந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. சிலாங்கூரில் அதிகமான நிறுவனங்கள் உலகளாவிய விண்வெளி தொழில் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பைப் பெறும் என்று மாநில அரசு நம்புகிறது” என்று அவர் இன்று முகநூலில் பதிவு செய்தார்.
மந்திரி பெசார், 2030 வாக்கில் உலகளவில் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மையமாக சிலாங்கூர் விளங்கும் என இலக்கை கொண்டுள்ளார். சிலாங்கூர் விண்வெளி தொழில் ஒருங்கிணைப்பு அலுவலகம் மூலம் இதன் பங்கை வலுப்படுத்தி உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில், மலேசியாவில் விண்வெளி உற்பத்தி நடவடிக்கைகள் ரிம 21.2 பில்லியன் வருவாய், பராமரிப்பு, பழுது மற்றும் பழுதுபார்ப்பு (ரிம 20.4 பில்லியன்) மற்றும் பொறியியல் மற்றும் வடிவமைப்பு (ரிம13.6 பில்லியன்) என எதிர்பார்க்கப்படுகிறது.