ஷா ஆலம், ஜூன் 22:
துனிசியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று நோய் இருப்பதை உறுதி செய்த பிறகு சிலாங்கூர் மாநிலத்தில் செமினி மாவட்டம் புதிய மஞ்சள் மண்டலமாக மாறியுள்ளது என சிலாங்கூர் மாநில கோவிட் -19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) தெரிவித்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு சம்பவங்களில் ஒன்று அந்நிய நாட்டவர் சம்பந்தப்பட்ட சம்பவம் ஆகும்.
” சமூக இடைவெளி, எப்போதும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் செலாங்கா செயலியை பயன்படுத்துவது போன்ற நடைமுறைகளை பின்பற்றி உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்,” என்று டிவிட்டரில் எஸ்திஎப்சி செய்தி வெளியிட்டுள்ளது.