காஜாங், ஜூன் 26:
கடந்த மார்ச் 18 தொடங்கி 70-க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டு வணிகர்களின் கடைகள் மீது காஜாங் நகராண்மைக் கழகம் (எம்பிகெஜே) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஸூல்கிப்லி காலிட் கூறினார். மாநில அரசாங்கம் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மீறி வணிகம் மேற்கொண்டு வந்த அந்நிய நாட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
” எம்பிகெஜே இந்த விடயத்தில் எந்த ஒரு சமரச போக்கையும் கடைபிடிக்காது. ஏனெனில், வியாபார நடவடிக்கைகள் செய்வதற்கு உள்ளூர் நாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது,” என்று இன்று நடந்த முழு எம்பிகெஜே கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் கூறினார்.