NATIONAL

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இரண்டாம் முறையாக மாற்றியமைக்கப் பட்டது !!!

புத்ராஜெயா, ஜூன் 28:

எஸ்பிஎம் தேர்வு எழுதுவதற்கான அட்டவணை இரண்டாம் முறையாக மாற்றியமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 9-ஆம் தேதி வரை என்று கல்வி அமைச்சு முடிவு செய்திருக்கிறது. இதற்கு முன்னர் இவ்வாண்டு நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரையில் எஸ்.பி.எம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்பட்டிருந்தது.

இதனிடையே,  மறு எஸ்.பி.எம் தேர்வுக்கான தேதி 23-ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ஆகஸ்ட் 17-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே வேளையில், எஸ்.வி.எம் தேதிக்கான முதல் தவணை 13-ஆம் தேதி தொடங்கி மே 24-ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 3-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கும் 28-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 9-ஆம் தேதிக்கு  மாற்றப்பட்டுள்ளது.


Pengarang :