புத்ராஜெயா, ஜூலை 19:
நேற்று மொத்தம் 78 நபர்களை காவல்துறையினர் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) மீறிய குற்றத்திற்காக கைது செய்ததாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இதில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், 35 பேர்கள் ஜாமினில் விடுவிக்கப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும், 42 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றார் அவர்