SELANGOR

இளம் சட்டமன்ற உறுப்பினராக 56 மாணவர்கள் தேர்வு

ஷா ஆலம், செப் 19- சிலாங்கூர் மாநிலத்தின் 2020ஆம் ஆண்டிற்கான மெய்நிகர் இளம் சட்டமன்ற உறுப்பினர் திட்டத்திற்கு 15 வயது மாணவர் உள்பட 56 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தில் 39 ஆண்களும் 17 பெண்களும் இடம் பெற்றுள்ளதாக மாநில சட்டமன்ற 
சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார். 

பதினேழு வயது முதல் முப்பத்தோரு வயது வரையிலான அந்த இளம் உறுப்பினர்கள் 
வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பர் என்று அவர் சொன்னார்.

வாக்களிக்கும் வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு நிர்வாகம் குறித்து இளம் வயதிலேயே அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இடைநிலைபள்ளி மாணவர்களையும் இத்திட்டத்தில் சேர்ப்பது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர் காலத்தில் தலைவர்களாக உருவாகக் கூடிய இளையோரை இப்போது தொடங்கி மெருகூட்டுவது அவசியம் எனக் கூறிய அவர், தங்கள் கருத்துக்களை எடுத்து கூறக் கூடிய வாய்ப்பை இந்த நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு வழங்கும் என்றார்.

Pengarang :