SELANGOR

வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு அபராதக் கழிவு

செலாயாங், அக்- வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில் 20 விழுக்காடு கழிவை வழங்க செலாயாங் நகராண்மைக் கழகம் முன்வந்துள்ளது. இந்த சலுகை இரு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த சலுகை காலத்தில் குற்றப்பதிவைக் கொண்ட வாகனமோட்டிகள் நகராண்மைக்கழக முகப்பிடங்கள், நடமாடும் அலுவலகங்களில் இந்த அபராதத் தொகையைச் செலுத்தலாம் என்று நகராண்மைக் கழகத் தலைவர் சம்சுல் ஷாரில் பட்லிஷா முகமது நோர் கூறினார்.

அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலிருப்பதை உறுதி  செய்ய குற்றப்பதிவை கொண்டவர்கள் உடனடியாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அபராதத்தை செலுத்திவிடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :