NATIONALSELANGOR

கோவிட்-19 தரவுகள் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், பிப் 8- கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான முழுமையான நடப்பு புள்ளி விவரங்களை சிலாங்கூர் அரசு பழையபடி மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளும்.

சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபாவுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் இவ்விவகாரம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இருதரப்புக்கும் இடையிலான தரவு பரிமாற்றம் முறையாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளை எளிதாக மேற்கொள்ள இயலும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் அரசின் செலங்கா செயலியில் உள்ள தகவல்களை 
மைசெஜாத்ரா செயலிக்கு மாற்றுவது மட்டுமின்றி இருதரப்புக்கும் இடையே பரஸ்பர தகவல் பரிமாற்றத்தையும் இந்த நடவடிக்கை உள்ளடக்கியிருக்கும் என்று அவர் மேலும்.

இதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இது உண்மையில் செயலாக்கம் காணும் என்று நம்புவோம். அடுத்தக்கட்ட திட்டமிடலுக்கு இந்த தரவு பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றார் அவர்.


Pengarang :