ஷா ஆலம், பிப 16– ஷா ஆலம் நகரில் நாளை நடைபெறும் இலவச கோவிட்-19 சமூக பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்கும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இங்குள்ள செக்சன் 19, எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த பரிசோதனை இயக்கம் நடைபெறுவதாக அவர் சொன்னார்.
கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநில அரசு மேற்கொள்ளும் பரிசோதனை இயக்கத்தில் செக்சன் 15,16,17,18,19,20 மற்றும் 24 பகுதிகளில் வசிப்போர் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக http://screening.selangkah.my என்ற அகப்பக்கம் வாயிலாக இச்சோதனைக்கு முன்பதிவு செய்து கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசாங்கம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 11ஆம தேதி முதல் பெரிய அளவிலான கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.
கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரதத்தை தணிப்பதற்கும் நோய் கண்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவாக இந்த பரிசோதனை திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது.