கோலாலம்பூர், ஏப் 14- நாட்டிலுள்ள தமிழ் மற்றும் மலையாளி சமூகத்தினருக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் ரியாத்துடின் அல்-முஸ்தாபா மற்றும் பேரரசியார் துங்கு ஹஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா தம்பதியர் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
அனைத்து மலையாளி நண்பர்களுக்கும் இனிய விஷு தின வாழ்த்துக்கள். அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என இஸ்தானா நெகாராவின் அதிகாரத்துவ முகநூலில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சுபிட்சம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை இந்த புத்தாண்டு வழங்கும் என பெரிதும் எதிர்பார்க்கிறோம். மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் விழைகிறோம் என்று அவர்கள் கூறினர்.
தமிழர்களின் சூரிய நாள்காட்டியின் படி ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் முதல் மாதமாக சித்திரை விளங்குகிறது. இன்று பிறக்கும் புதிய ஆண்டு பிலவ ஆண்டாகும்.