கோலாலம்பூர், ஏப் 20- வட சுமத்திராவின் மேற்கரையை மிதமான நில நடுக்கும் உலுக்கியது. ரிக்டர் அளவைக் கருவியில் 5.9 எனப் பதிவான அந்த நில நடுக்கம் இன்று காலை 7.58 மணியளவில் ஏற்பட்டது.
இந்தோனேசியவின் நியோஸ் நகரின் தென்மேற்கே 169 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் அந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.
எனினும், அந்த நில நடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி அபாயம் ஏற்படவில்லை என்றும் அது தெரிவித்தது.