ECONOMYPBTPENDIDIKANSELANGOR

சிலாங்கூரில் கல்விக் கூடங்களை உட்படுத்திய இரு புதிய தொற்று மையங்கள்

ஷா ஆலம், ஏப் 26- கல்வியமைச்சின் கல்விக் கூடங்களை உட்படுத்திய இரு புதிய கோவிட்-19  தொற்று மையங்கள் சிலாங்கூர் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

இம்மாதம் 19ஆம் தேதி  மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கிள்ளான், புக்கிட் நாகாவில் தொற்று மையம் ஒன்று  கண்டு பிடிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஷா ஆலம், ஜாலான் புக்கிட் நாகாவிலுள்ள பள்ளி ஒன்றில் பணியாளரை உட்படுத்திய தொற்று மையம் கண்டு பிடிக்கப்பட்டது.  இதுவரை அங்கு 127 பேர் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 18 நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இதனிடையே, பள்ளி மாணவர் ஒருவர் சம்பந்தப்பட்ட தொற்று மையம் கோம்பாக், ரவாங், ஜாலான் கோல காரிங்கில் கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு 230 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.


Pengarang :