HEALTHNATIONAL

புதிய கோவிட் -19 நோய்த்தொற்று – சிலாங்கூர் 1,083 சம்பவங்களுடன் உயர்ந்து வருகிறது

கோலாலம்பூர், ஏப்ரல் 29– மலேசியாவில் புதிய கோவிட் -19 நோய்த்தொற்று  தொடர்ந்து உயர்ந்துக் கொண் டு வருகிறது இன்று புதிய வரம்பை எட்டியுள்ளது  3,332 நோய்த்தொற்று கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது, இது நாட்டில் ஒட்டுமொத்த கோவிட் -19 தொற்றுகளை 404,925 ஆகக் கொண்டு வந்துள்ளது.

இன்று தகவல்படி 1,083 தொற்றுகளுடன் உயர்ந்த எண்ணிக்கை கொண்ட மாநிலமாக சிலாங்கூர் உள்ளது,  அதைத் தொடர்ந்து  அதிக தொற்று கண்ட மாநிலமாக சராவா மாநிலம்  522 சம்பவங்களை கொண்டுள்ள வேளையில் கிளந்தான் (401) மற்றும் கோலாலம்பூர் (359) எண்ணிக்கைகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

 


Pengarang :