ஷா ஆலம், மே 10– நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,807 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் அந்நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 444,484 ஆக உயர்ந்துள்ளது.
இந்நோய்த் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 1,149 சம்பவங்களுடன் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சரவா (649) மற்றும் கிளந்தான் (329) உள்ளன.
கோலாலம்பூரில் 320 சம்பவங்கள் பதிவான வேளையில் ஜொகூர் (257), பினாங்கு (245), கெடா (224), நெகிரி செம்பிலான் (144), பேராக் (119), சபா (96), பகாங் (77), புத்ரா ஜெயா (11) அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன. லபுவான் மற்றும் பெர்லிசில் தலா மூன்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.