卫生总监丹斯里诺希山
ECONOMYHEALTHNATIONALSELANGOR

நாட்டில் இன்று 6,509  கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 2,049 நேர்வுகள்

கோலாலம்பூர், மே 24- நாட்டில் இன்று 6,509 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. சிலாங்கூர் மாநிலம் 2,049 சம்பவங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

சிலாங்கூருக்கு அடுத்து சரவா மாநிலத்தில் 530 சம்பவங்களும் கோலாலம்பூர் மற்றும் ஜோகூரில் தலா 468 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கிளந்தானில் 451 சம்பவங்களும்,  பினாங்கில் 384 சம்பவங்களும், கெடாவில் 348 சம்பவங்களும், நெகிரி செம்பிலானில் 329 சம்பவங்களும், மலாக்காவில் 329 சம்பவங்களும், திரங்கானுவில் 263 சம்பவங்களும் பதிவான வேளையில் அதற்கு அடுத்து பகாங்கில் 257,   பேராக்கில்   231 சம்பவங்களும் சபாவில் 184 சம்பவங்களும் பதிவான வேளையில் அதற்கு அடுத்து லபுவான் (171 ), புத்ரா ஜெயா (40), பெர்லிஸ் (7) ஆகிய மாநிலங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

இதன் வழி நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 518,600 ஆக உயர்வு  கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :