HEALTHNATIONAL

கோவிட்-19 தாக்கம் சற்று தணிந்தது- இன்று 6,999 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், மே 30- கோவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கம் இன்று தணிந்து 6,999 சம்பவங்களாக பதிவானது.

நேற்று பதிவான 9,020 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இன்று 2,021 சம்பவங்கள் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

சிலாங்கூர் வழக்கம் போல் 2,477 சம்பவங்ளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் (616 சம்பவங்கள்), கிளந்தான் (612 சம்பவங்கள்), சரவா (513 சம்பவங்கள்) நெகிரி செம்பிலான் (468 சம்பவங்கள்) உள்ளன.


Pengarang :